திருமணநாள் -குறும்படம்

 

பிரச்சனைகளை கண்டு ஓடி ஒளிவது வாழ்க்கையல்ல. ஒருவருக்கு  ஒருவர் பிரச்சனைகளை  எதிர்கொள்வதே வாழ்க்கை.ஏனெனில் தனிமை கொடுமையானது.  

📽பதிவு:செ.மனுவேந்தன் 


குலுங்கி சிரிக்க ஒரு நிமிடம்

நகைச்சுவை ஜோக்ஸ் 

"தமிழரின் உணவு பழக்கங்கள்"பகுதி: 25

"தமிழரின் உணவு பழக்கங்கள்" / "FOOD HABITS OF TAMILS" PART : 25 "பண்டைய சங்க தமிழரின் உணவு பழக்கங்கள் தொடர்கிறது" / "Food Habits of Ancient Sangam Tamils continuing" [ஆங்கிலத்திலும் தமிழிலும் / In English and Tamil]

 


பெரும்பாணாற்றுப்படையில் கானவர் விருந்து பற்றி கூறுகையில், வேட்டையாடும் காட்டுப் பகுதியைத் தாண்டிச் சென்றால் வீட்டுப் பகுதி வரும். அங்கே, செந்நெல் அரிசி கொண்டு சமைத்த சோறு, முள்ளம் பன்றிக் கறிக் குழம்பு, உடும்புக் கறி வறுவல், இந்த விருந்தினை ஆங்காங்கே போகுமிடமெல்லாம் நீங்கள் பெறுவீர்கள் என்கிறார். [கொடு வில் எயினக் குறும்பில் சேப்பின், களர் வளர் ஈந்தின் காழ் கண்டன்ன, சுவல் விளை நெல்லின் செவ்அவிழ்ச் சொன்றி, குமலி தந்த மனவுச்சூல் உடும்பின், வறைகால் யாத்தது வயின் தொறும் பெருகுவிர், 129-133]. குறுஞ்சி பகுதியில், திருடர்கள், தன் சொற் கேளாத பகை மன்னருடைய காவலமைந்த நிலத்தே சென்று, விடியற்காலத்தே அவர்கள் கால்நடைகளைப் பற்றிக் கொணர்ந்து அவற்றைக் கள்ளுக்களில் இனிதாகிய நெல்லாற் செய்த கள்ளுக்கு விலையாகப் போக்கி, அதனுடன் கவர்ந்து கொண்டு வந்த ஒரு வலிமையான காளையை மன்றத்தில் அடித்துத் துண்டாக்கி தின்றதை வர்ணிக்கிறது வரிகள் 140-143. [கேளா மன்னர் கடிபுலம் புக்கு, நாள்ஆ தந்து நறவு நொடை தொலைச்சி, இல்அடு கள்இன் தோப்பி பருகி, மல்லல் மன்றத்து மதவிடை கெண்டி,]

சங்க காலத்திலே வாழ்ந்த தமிழர் அன்றாடத் தேவையான அரிசி, பருப்பு, உப்பு, பால், தயிர், மீன், இறைச்சி முதலான பொருள்களைக் காசு கொடுத்து வாங்காமல் பொதுவாக பண்டமாற்று செய்து கொண்டார்கள். கொண்டு வந்த பொருளுக்கு மாற்றாக மற்றொரு பொருளை தரும் வணிக வழக்கம் தான் இந்த ஆரம்பகால வணிக வழக்கமாகும். அங்கு நெல்லே பிரதான பரிமாற்ற ஊடகமாக இருந்தது, இதை தொடர்ந்து உப்பு இரண்டாவது இடத்தை வகுத்தது. உதாரணமாக தேன், கிழங்குவகைகள் பொதுவாக மீன் கல்லீரல் எண்ணெய் மற்றும் கள்ளுக்கும் [fish liver oil and toddy] பரிமாறப்பட்டன. அதேவேளை, கரும்பு, அவல் போன்றவை மான் இறைச்சி, கள்ளு போன்றவற்றிற்கு பரிமாறப் பட்டன. சங்க பாடல்கள், உதாரணமாக புறநானூறு பாடல் ஒன்று, பாண்டிய நாட்டில், நெல்லை பருப்பு வகைக்கும் மீனுக்கும் பரிமாறப்பட்டதை உறுதிப்படுத்துகிறது. மேலும் அகநானுறு 140, "காதல் மட மகள், சில் கோல் எல்வளை தெளிர்ப்ப வீசி, நெல்லின் நேரே வெண் கல் உப்பு எனச், சேரி விலைமாறு கூறலின்" என்ற அடிகள் - உப்பளத்தில் உழாமல் விளையும் உப்புக்கு ஒரு விலையிட்டு, வெண்ணிறக் கல் உப்பு நெல்லுக்கு ஒத்த அளவினதே எனச் சேரியின்கண் பண்ட மாற்றாக விலை கூறி, உப்பு வணிகரின் இளைய மகள் உப்பை விற்றாள் என்று கூறுகிறது.

 

அதி காலையில், பறவைகள் எழும்போதே எழுந்து, புலிபோலும் முழக்கத்தையுடைய மத்தினை ஆரவாரிக்கும்படி கயிற்றை இழுத்து ஆயர் மகளிர் தயிரைக் கடைந்து வெண்ணெய் எடுத்து நெய் காய்ச்சினார்கள். தயிரையும் மோரையும் பண்ட மாற்று செய்து தானியத்தைப் பெற்று உணவு சமைத்து உண்டதைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் முல்லை நிலத்தின் ஊடாக போகையில் காண்கிறார். [புலிக்குரல் மத்தம் ஒலிப்ப வாங்கி, ஆம்பி வால்முகை அன்ன கூம்பு முகிழ், உறை அமை தீம் தயிர் கலக்கி நுரை தெரிந்து, புகர்வாய்க் குழிசி பூஞ்சுமட்டு இரீஇ, நாள் மோர் மாறும், 155-160 ]. இறுதியாக அவ்விடையர் குடியின் விருந்தோம்பற் சிறப்பை விளக்குகையில், அவர்களின் குடியிருப்பை நீ சேரும் போது, நண்டின் சிறிய குஞ்சுகளைப் போன்ற செவ்விய தினையரிசியால் சமைத்த சோற்றைப் பாலுடன் கலந்து தருவார்கள் என்கிறார். [குடி வயிற் சேப்பின், இருங்கிளை ஞெண்டின் சிறுபார்ப்பு அன்ன, பசுந்தினை மூரல் பாலொடும் பெறுகுவிர், 165-167]. நீ மேலும் நடந்து போனால், மருதநிலப் பகுதியை அடைவாய். பசியையும் வறுமையையும் அறியாத - செல்வம் நிறைந்த - இந்த ஊரிலே தங்கினால், சோம்பலின்றித் தூங்காமல் பாடுபடும் உழவுத் தொழிலாளர்கள் விளைவித்துத் தந்த வெண்மையான நெற்சோறும் அதனுடன் வீட்டிலே வளர்ந்த பெட்டைக் கோழியின் பொரியலும் கிடைக்கும் என அறிவுறுத்துகிறார். [தொல்பசி அறியாத் துளங்கா இருக்கை, மல்லல் பேர்ஊர் மடியின் மடியா, வினைஞர் தந்த வெண்ணெல் வல்சி, மனைவாழ் அளகின் வாட்டொடும் பெறுகுவிர்,253--256 ].

 

பேரியாழ் வாசிக்கும் பாணனொருவன் வறுமையால் வாடும் இன்னொரு பாணனைத் தொண்டைமான் இளந்திரையன் என்னும் மன்னனிடம் ஆற்றுப் படுத்துவதாக அமைந்த, பழைமை வாய்ந்த பெரும்பாணாற்றுப்படையில் மேலும், கரும்பினைப் பிழிவதற்கு எந்திரத்தைப் பயன் படுத்தியுள்ளனர் என்ற தொழில் நுட்பத்திறனும் கூட புலனாகின்றன. நீ மேலும் நெல்மணி விளையும் கழனிகளை அடுத்து கரும்புத் தோட்டங்கள் வழியே செல்வாயானால், அங்கு யானை பிளிறுவது போல் கரும்பை நெரிக்கும் எந்திரத்தின் ஓசை கேட்கும். அங்கே கரும்புப் பாலை கட்டியாகக் காய்ச்சுவார்கள். ஆகவே நீ அவ்விடம் சென்று கரும்புப் சாறு பருகலாம் என்று அறிவுறுத்துகிறார்.[எந்திரம் சிலைக்கும் துஞ்சாக் கம்பலை, விசயம் அடூஉம் புகை சூழ் ஆலை தொறும், கரும்பின் தீம்சாறு விரும்பினிர் மிசைமின், 260-262]

 

மூங்கிலைப் பரப்பி அதன் மேல் வெண்மையான கிளைகளை வைத்து, தாழை நாரினைக் கொண்டு கட்டி, அதன்மேல் தருப்பைப் புல்லை வைத்து வேய்ந்த குடிசைகளில் வாழும் நெய்தல் நில மீனவர், தாமே குற்றாத அரிசியில், பெரிய வாய் அகன்ற பாத்திரத்தில் தயாரித்த மதுவையும், சுட்ட மீனையும் பாணனே உனக்கு அமுதாக படைப்பர், நீயதை உண்ணலாம் என்று கூறுகிறார். அது மட்டும் அல்ல, அவர்களின் வீட்டு வாசலிலே பறி எனும் மீன் பிடிக்கருவிகள் எப்போதும் கிடக்குமாம் என்று அடையாளமும் காட்டுகிறார். [வல்வாய்ச் சாடியின் வழைச்சுஅற விளைந்த, வெந்நீர் அரியல் விரல் அலை நறும்பிழி, தண் மீன் சூட்டொடு தளர்தலும் பெறுகுவிர், 279-281].

 

நன்றி

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்] 

 

பகுதி : 26 தொடரும்

👉அடுத்த பகுதியை வாசிக்க அழுத்துக-soon 

👉ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக 

Theebam.com: "தமிழரின் உணவு பழக்கங்கள்"பகுதி: 01 

 

"FOOD HABITS OF TAMILS" PART: 25

"Food Habits of Ancient Sangam Tamils continuing"

 


Perumpanattuppadai further says that  At the fort of the forest dwellers in many homes they will serve red rice grown in uplands that look like red berries of eenthu palms along with poriyals (stir fried) made of the flesh of iguana [கொடு வில் எயினக் குறும்பில் சேப்பின், களர் வளர் ஈந்தின் காழ் கண்ட ன்ன, சுவல் விளை நெல்லின் செவ்அவிழ்ச் சொன்றி, குமலி தந்த மனவுச்சூல் உடும்பின், வறைகால் யாத்தது வயின் தொறும் பெருகுவிர்]. In the kurinchi region the thieves who steal cattle sell them to buy sweet rice liquor and enjoy it along with meat of sturdy goats [கேளா மன்னர் கடிபுலம் புக்கு, நாள்ஆ தந்து நறவு நொடை தொலைச்சி, இல்அடு கள்இன் தோப்பி பருகி, மல்லல் மன்றத்து மதவிடை கெண்டி].

 

During the sangam period, Inland trading was conducted primarily through barter in busy market places. Paddy was the most commonly accepted medium of exchange, followed by purified salt. Honey and roots [edible yams] were exchanged for fish liver oil and toddy [arrack], while sugarcane and rice flakes were traded for venison and toddy. Poems in Purananuru describe the prosperous house in Pandya land well stocked with paddy that the housewife had exchanged for grams and fish. For example, In Akananuru 140, lines, We find that an innocent daughter of a salt merchant, walks through the settlement with salt, swaying her hands, jingling her round, bright bangles and shouting, “equal measure of white grainy salt for rice paddy!” [காதல் மட மகள், சில் கோல் எல்வளை தெளிர்ப்ப வீசி, நெல்லின் நேரே வெண் கல் உப்பு எனச், சேரி விலைமாறு கூறலின்]

 

In the region where cattle herders lived, small goats were tied to posts in front of their huts. The women churned yogurt to make butter and carried it in pots to the market to sell [புலிக்குரல் மத்தம் ஒலிப்ப வாங்கி, ஆம்பி வால்முகை அன்ன கூம்பு முகிழ், உறை அமை தீம் தயிர் கலக்கி நுரை தெரிந்து, புகர்வாய்க் குழிசி பூஞ்சுமட்டு இரீஇ, நாள் மோர் மாறும்].They fed their families with the money earned from selling buttermilk. The minstrel advices the panars that if they ask for food, these women will feed them fresh millet cooked in milk along with white avarai beans [குடி வயிற் சேப்பின், இருங்கிளை ஞெண்டின் சிறுபார்ப்பு அன்ன, பசுந்தினை மூரல் பாலொடும் பெறுகுவிர்]. If they walk further they will see tall cattle sheds and grain granaries in the front yard that resembles elephants. If the bards stay here where hunger is unknown, they will get white rice along with well fried flesh of domestic fowl [தொல்பசி அறியாத் துளங்கா இருக்கை, மல்லல் பேர்ஊர் மடியின் மடியா, வினைஞர் தந்த வெண்ணெல் வல்சி, மனைவாழ் அளகின் வாட்டொடும் பெறுகுவிர்].

 

Though the people of New Guinea were probably the first to domesticate sugarcane, sometime around 8,000 BC. the extraction and purifying technology techniques were developed by Indians. Originally, people chewed sugarcane raw to extract its sweetness, but later they discovered how to crystallize sugar, probably carried out through the simple process of crushing cut-pieces of cane by a heavy weight and boiling the juice extracted and stirring until solids formed. These solids being of uneven shapes and sizes were called jaggery [Sarkara / chakkarai]. Even Perumpanattuppadai describes one of such sugar cane mills found during the Sangam period in Tamil Nadu, in lines 260-262, as "they will also get sugarcane juice, as much as they desire from the noisy sugar cane mills where cane juice was boiled to make jaggery" [எந்திரம் சிலை க்கும் துஞ்சாக் கம்பலை, விசயம் அடூஉம் புகை சூழ் ஆலைதொறும், கரும்பின் தீம்சாறு விரும்பினிர் மிசைமின்].

 

In the neithal region where fishermen live, they will see short roofed huts covered with thatched tarpai grass. Fish baskets lie in front of the huts and when the bards stay there, fisherwomen will serve them a drink made from a mash of un-pounded boiled rice mixed with fine powdered sprouts of rice, cooled in large wide mouthed pots for two days to sweeten it along with fried fish [வல்வாய்ச் சாடியின் வழை ச்சுஅற விளைந்த, வெந்நீர் அரியல் விரல் அலை நறும்பிழி, தண் மீன் சூட்டொடு தளர்தலும் பெறுகுவிர்].

 

Thanks

[Kandiah Thillaivinayagalingam,Athiady, Jaffna]

 

PART : 26 WILL FOLLOW

பிராய்லர் கோழியை எப்படி வளர்க்கிறார்கள்?

 அது உடலுக்கு நல்லதா, கெட்டதா?


இந்தியாவின் பெரும்பகுதி மக்கள் கோழி இறைச்சியை தங்களது முக்கிய உணவாக சேர்த்துகொள்கின்றனர். ஆனால் அவர்கள் உண்ணும் கோழி உண்மையில் எந்த வேதிப்பொருளும் கலக்காத , நச்சுத்தன்மை இல்லாத ஒன்று என எப்படி கண்டுபிடிப்பது?

 

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிக பிராய்லர் கோழிகள் உற்பத்தி செய்யப்படுவதாக மத்திய அரசின் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகத்தின் 2019ஆம் ஆண்டு தரவுகள் கூறுகிறது.

 

இந்திய கோழிவளர்ப்புத் துறையின் மதிப்பு 204900 கோடி என்று கோழி விவசாயிகள் ஒழுங்குமுறைக் குழுவின் (PFRC) இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

ஜெர்மனியை சேர்ந்த தரவுகளை கையாளும் ‘Statista’ நிறுவனத்தின் தரவுகளின்படி 2023இல் இந்தியாவில் மட்டும் 4,407.24 மெட்ரிக் டன் பிராய்லர் இறைச்சி உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

 

இருப்பினும், பல ஆண்டுகளாகவே தமிழகத்தில் இந்த பிராய்லர் கோழி குறித்து பல்வேறு வதந்திகள் உலா வருகிறது. பிராய்லர் கோழிகளுக்கு தவறான ஊசிகள், மருந்துகள் கொடுக்கப்படுகின்றன, அவற்றால் பல்வேறு உடல்நலக் கோளாறுகள் ஏற்படுகின்றன உள்ளிட்டவை அந்த வதந்திகளில் அடங்கும்

மேலும் அறிய கீழ் உள்ள காணொளியில் பாருங்கள்.


நன்றி ;பிபிசி தமிழ் 

பழகத் தெரிய வேணும் – 14

(பெண்ணுக்கு மரியாதை)

பல ஆண்கள் பெண்களை மட்டமாக நடத்துகிறார்கள் என்று நீங்கள் எழுதுவதைப் பார்த்து எனக்கு ஆத்திரமாக இருக்கும். நீங்க எழுதறது உண்மைதான்னு இப்போ புரியுது. என் மகளை அவளுடைய கணவர் அப்படித்தான் நடத்துகிறார். வருத்தமா இருக்கு!” என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு தெரிவித்தார் ஒரு பத்திரிகை ஆசிரியர்.

ஆண்தான் மேலானவன்என்பதுபோல், அவரே தன் மனைவியை அப்படி நடத்தியிருக்கக்கூடும். ஆனால், ‘மகள்என்று வரும்போது, ஆண்களின் பக்கம் சாயத் தோன்றவில்லை. மருமகன் மீதுதான் கோபம் எழுந்தது.

தன்னை அவமரியாதையாக நடத்தும் கணவனை மகள் ஏன் எதிர்ப்பதில்லை என்ற குழப்பம் அவருக்கு. தாயைப் பார்த்தே வளர்ந்திருந்தால் மகள் வேறு எப்படி இருப்பாள்?

மகனும் தந்தையைப்போலவே தன் மனைவியிடம் அலட்சியம் காட்டுவான். அந்த நடத்தை அவருக்குத் தப்பாகத் தோன்றாது.

ஒரு முதியவர் கடிதம்வழி, மகிழ்ச்சியுடன் என்னிடம் தெரிவித்தார், ‘என் மனைவி என் மனம் கோணாது நடப்பவள். மிகவும் பொறுமைசாலி,’ என்று.

பதிலுக்கு, ‘உங்கள் மனைவியின் மனதில் உண்மையான மகிழ்ச்சி இருக்கிறதா?’ என்று கேட்டிருந்தேன்.

கணவனின் மகிழ்ச்சிக்காக பலவற்றை விட்டுக்கொடுக்கவேண்டும் என்று பழமையிலேயே ஊறிப்போன பெண்கள் எண்ணுகிறார்கள்.

கதை

அடிக்கடி, நான் அம்மன் பக்தன்என்று பெருமையுடன் சொல்லிக்கொள்வார் சீலன். எல்லா பக்திப்பாடல்களும் அவருக்கு மனப்பாடம்.

ஆனால், அவர் மனைவி விமலாவை நடத்துவதைப் பார்த்தால், அவளுக்கு எதுவுமே தெரியாது, அடிமுட்டாள் என்பதுபோல் இருக்கும்.

சீலனுடைய மனதில் ஒரு வக்கிரம். மனைவியைப்போல் இல்லாத பெண்களைக் கண்டால் அலாதி மோகம். அவர்கள் நட்பைப் பெற பல முயற்சிகள் எடுப்பார்.

அறிவாளிகளான பெண்களுடன் நட்பு வைத்துக்கொள்ள எனக்குப் பிடிக்கிறது. சும்மா பேச மட்டும்தான்னு சொல்வார்,” என்று அப்பாவித்தனமாக விமலா கூறும்போது, கேட்பவர்களுக்கு அவள்மேல் பரிதாபம்தான் எழும்.

சீலனுக்குப் புரியாதது: அவர் எதிர்பார்த்தபடி, நடத்தியபடிதான் மனைவி ஆகியிருக்கிறாள். அவளை அவர் தோழமையுடன் நடத்தி, அவளுக்குத் தெரியாததைப் பொறுமையாகச் சொல்லிக்கொடுத்திருந்தால் அவளுக்கு அவர்மேல் அன்பு ஏற்பட்டிருக்கும். அவர் எப்படி நடத்தினாலும், ‘தலைவிதிஎன்று விரக்தியுடன் அதைப் பொறுத்துப் போயிருக்கமாட்டாள்.

புதிய விஷயங்களைக் கற்பதில் அவள் ஆர்வம் காட்டாவிட்டாலும், வேறு எதிலாவது சிறந்திருக்கமாட்டாளா! அதைப் பாராட்டியிருக்கலாமே!

ஏன் இந்த அதிகாரம்?

மனைவி ஒரு போகப்பொருள் மட்டும்தான் என்று நம்புகிறவன் அவளிடம் அதிகாரம் செலுத்துகிறான். அதனாலேயே அவளுடைய நட்பை இழக்கிறான். அதை வெளியே, நண்பர்களிடமோ, பிற பெண்களிடமோ தேடுகிறான்.

பெண்ணுக்கான கட்டுப்பாடுகள்

அவள் உணர்ச்சிப்பெருக்கில்லாது, ஆணைப்போல் யோசிக்கவேண்டும்.

ஓயாது உழைக்கவேண்டும். ஆனால், இளமையும் மாறாது இருக்கவேண்டும்.

மொத்தத்தில், கணவன் பிற ஆண்களிடம் பெருமையாகப் பேசிக்கொள்ள ஏற்ற வகையில் இருக்கவேண்டும்.

நடக்கிற காரியமா?

ஒரு பெண்ணை அவளது கணவன் ஏதோ செல்லப்பிராணி என்பதுபோல் நடத்தி, அதற்கு அவள் பணிந்தும் போனால், அது அவனுக்குக் காட்டும் மரியாதையாலோ, அன்பினாலோ இல்லை. அவள் வளர்க்கப்பட்ட விதத்தில் எங்கோ கோளாறு நேர்ந்திருக்கிறது என்றே தோன்றுகிறது.

கதை

சீதாபதி மெத்தப் படித்தவன். பத்து வயதுக்குட்பட்ட மூன்று குழந்தைகளின் தந்தை. பெண்பித்தன்.

திருமணமாகாத இளம்பெண்களைப் பார்த்தால், உரிமையுடன் அவர்கள் தோளில் கைபோட்டு, “என் மனைவி இங்கிதம் தெரிந்தவள்,” என்று ஆரம்பிப்பான்.

அவனில்லாதபோது, அவளும், ‘ஆம்படையானுடைய சந்தோஷத்தைவிட நமக்கு வேற என்னடி வேணும்?” என்பாள்.

எனக்கு நிறையப் பெண்கள் கிடைப்பார்கள்!’ என்று பெருமை பேசுகிறவன் தனக்கு ஆண்மை அதிகம் என்று எண்ணுகிறான். உண்மையில், அவனிடம் ஏதோ குறை இருப்பதால்தான் பெண்களை மயக்க முயற்சிக்கிறான். கலாசாரமும் துணை புரிகிறது.

அண்மையில் படித்தது

மெடகாஸ்கர் (MADAGASCAR) ஆப்பிரிகாவின் கிழக்குப் பகுதியில் இருக்கும் ஒரு தீவு. மிக ஏழ்மையான நாடு.

ஆண்கள் பெண்களை வதை செய்வது சர்வசாதாரணம். தமக்கு இழைக்கப்படும் அநீதிகளை ஏற்றே பழக்கப்பட்டதால், கணவன் அடித்து, உதைக்காவிட்டால் அவனுக்குத் தன்மீதுள்ள அன்பு குறைந்துவிட்டது என்று அத்தீவிலுள்ள பெண்கள் நினைக்கிறார்கள்!

பெண்களை எவ்விதமாவது வதை செய்வது சட்ட விரோதம் என்று இப்போது விதிக்கப்பட்டிருந்தாலும், அந்நாட்டில் எந்தப் பெண்ணும் வலிய வந்து புகார் கொடுப்பதில்லை. ஒரு பெண்ணுக்கு லஞ்சம் கொடுத்துத்தான் அவளைப் புகார் அளிக்கச் செய்ய முடியுமாம்!

ஏழ்மை, அதனால் எழும் வருத்தம் அல்லது அசௌகரியம், கலாசாரம் எல்லாம் ஆண்கள் தான்தோன்றித்தனமாக நடக்க வைக்கிறது. பெண்களையும் இவ்வாறு அடிமை வாழ்க்கையை ஏற்கச் செய்திருக்கிறது.

 கதை

நாற்பது வயதுவரை, ‘எனக்கும் கல்யாணம் என்று ஒன்று ஆகுமா!’ என்று ஏங்கிய மலேசியப் பெண் கலாவதி.

ஒருவழியாக, திருமணம் ஆனதும், ஒவ்வொரு இரவிலும் கணவன் தன்னை நாடுவது அவளுக்குப் பெருமையைக் கொடுத்தது. அதற்குப்பின், அவளைக் கட்டிலிலிருந்து கீழே தள்ளி, அடித்து உதைப்பான். அதனால் என்ன மோசம்!

வதை அதிகரித்து, சமூகநல அதிகாரிகளின் கவனத்திற்கு கலாவதி கொண்டுவரப்பட்டாள்.

பரிதாபத்துக்குரிய இப்பெண்ணுக்குப் புத்தி சொல்வதாக எண்ணி, “ஐயோ! இந்தமாதிரி மனிதனுடன் ஏன் சேர்ந்து இருக்கிறாய்?” என்று நான் அலறினேன்.

அவருக்கு இல்லாத உரிமையா!”என்று கேட்டவளின் குரலில் கோபம்

ஏன் இந்த அவல நிலை?

பல இந்தியக் குடும்பங்களில், ‘என்ன இருந்தாலும், நீ ஒரு பெண்!’ என்று சொல்லியே பெண்குழந்தைகளை வளர்க்கிறார்கள். அவர்களுக்குள் ஏதோ ஏமாற்றம், வெறுமை. அந்தக் குழப்பம் எதனால் என்று புரிவதுமில்லை.

ஆண்என்றால் உயர்ந்த மனிதன் என்ற எண்ணம் பதிந்துவிடுவதால் அவனை அண்டி வாழ்ந்தால்தான் தனக்கு மதிப்பு என்று தோன்றிவிடுகிறது.

தம்மைப்போல் இல்லாத பிற பெண்களைக் கண்டால் அவர்களுக்கு கோபம். பொறாமையும் எழலாம். ஆனால் மாறவும் பயம். அப்போது யார் பக்கபலமாக இருப்பார்கள்? 

(தொடரும்)

:-நிர்மலா ராகவன் /=எழுத்தாளர், சமூக ஆர்வலர். மலேசியா.

தொடரும்.... 
👉அடுத்த பகுதியை வாசிக்க 

👉ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக